வாழைத்தோட்டம் – பழைய யோன் வீதி பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த 60 வயதுடைய நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.