இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என்றும் 430 கிலோ ஹெரோயினைப் பொலிசார் கைப்பற்றியிருந்தார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் சிக்கிய இரண்டாவது ஆகக்கூடுதலான ஹெரோயின் தொகை நேற்று முன்தினம் பேருவளையில் கைப்பற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்தார்.