ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் கெஸ்பேவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1 கிலோ 10 கிராம் எடைகொண்ட குறித்த ஹெரோயின் தொகையுடன், மேலும் 60 லட்சத்து 94 ஆயிரத்து 820 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.