ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் தலங்கம, ரொபட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 20g200mg ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.