(FASTNEWS|COLOMBO) ஜா-எல பகுதியில் வெவ்வேறு வகையான போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 16 கிலோ கிராம் ஹெரோயின், 5 கிலோ கிராம் ஹேஷீஸ், ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 துப்பாக்கிகளும்மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.