ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது…

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் திக்வெல்ல – தொடம்பஹல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிற்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 50 கிராத்திற்கு அதிகமான ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் இதற்கு முன்னர் ஹெரோயின் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.