ஹேமசிறி பெர்ணான்டோவிடம் 09 மணிநேர வாக்குமூலம்

(FASTNEWS|COLOMBO) – குற்றப்புலனாய்வு திணைக்களம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிடம் நேற்று(15) 09 மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபரும் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.