ஹோமாகம கிரிக்கெட் மைதானம் தேவையா? மஹேல கேள்வி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்  தெரிவிக்கையில்,நாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் மைதானங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிலையில், இலங்கைக்கு மேலும் ஒரு மைதானம் அவசியம் தான என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் எங்களிடம் இருக்கும் மைதானங்களில் போதுமான சர்வதேச அல்லது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் கூட இடம்பெறுவதில்லை என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.