ஹோர்ட்டன் வனத்தில் ட்ரோன் கெமரா பயன்படுத்தியவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம்…

(FASTNEWS|COLOMBO) சட்டவிரோதமாக ட்ரோன் கெமரா பயன்படுத்தி, ஹோட்டன் வனாந்தரத்தை ஒளிப்பதிவு செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சீன பிரஜைகள் மூவருக்கு, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத ஜயசேகர, தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று(26) உத்தரவிட்டுள்ளார்.

ஹோட்டன் பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த குறித்த சீன பிரஜைகள் மூவரும், ஹோட்டன் நிர்வாகத்துக்கு அறிவிக்காமல், ட்ரோன் கெமராவைப் பயன்படுத்தி, ஹோர்ட்டன் வனத்தை ஒளிப்பதிவு செய்த போது, வனாந்தரத்தின் அதிகாரிளால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.