உள்ளாடை திருடிய வர்த்தகர் சிக்கினார்

தன்னுடைய வர்த்தகக்கடைக்கு முன்னால் உள்ள வர்த்தகக் கடை உரிமையாளருடைய வீட்டில் இருந்த இளம் பெண்ணின் உள்ளாடைகளை திருடி வந்த வர்த்தகரொருவரை விரட்டியடித்த சம்பவம், இடம்பெற்றுள்ளது.

ஒரு பிரதான வீதியில் ஒரு பக்கத்தில், வர்த்தகக் கடையொன்று இருந்துள்ளது. அதற்கு எதிர்புறத்தில், மற்றொரு வர்த்தகக் கடையும் இருந்துள்ளது. இரண்டு வர்த்தகர்களும் வெகுநாட்களாக தொழில்புரிந்து வருவதால், ஒருவரைப் பற்றி  ஒருவர் நன்றாகத் தெரிந்தே வைத்திருந்தனர்.

ஒரு வர்த்தகரது கடைக்குப் பின்னால், அவருடைய வீடும் இணைந்து கட்டப்பட்டிடுள்ளது. மற்றையவருடைய வீடு, நகரத்துக்கும் சற்று தூரம் இருப்பதால், அவர் அக்கடையில் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.

இவர் தனிமையில் இருக்கும் போது, எதிர்வீட்டு கடையின் வீட்டிலுள்ள இளம் பெண், குளித்துவிட்டு, அவருடைய கழுவப்பட்ட ஆடைகளை, பூங்காவில் காயவைப்பார்.

இதை வெகுநாட்களாக அவதானித்து வந்தவர், மெதுவாக யாருக்கும் தெரியாமல் சென்று, இளம் பெண்ணின், உள்ளாடைகளை திருடிக்கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு வெகுநாட்களாக நடைபெற, குறித்த பெண், இது குறித்து வீட்டாருக்கு தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், வர்த்தகக் கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராவில், பார்த்த போது, எதிர் பக்கக்கடையில் உள்ள வர்த்தகர், உள்ளாடைகளை திருடும் காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து, மறுநாள் காலையே, கடையில் உறங்கிக்கொண்டிருந்த வர்த்தகரை வெளியே வரவழைத்து, அனைவரும் தாறுமாறாக திட்டியுள்ளனர். வெட்கம் தாங்க முடியாமல், அந்த வர்த்தகர், தனது கடையை மூடிவிட்டு, ஊரை விட்டே போய்விட்டார்.