பாம்பை விரட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தேசிக்காய் வைப்பு

இரவிரவாக வீட்டுக்கு வருகின்ற நாகபாம்பை விரட்டியடிப்பதற்கு, காலியிலிருந்து, கம்பளைக்கு வந்த ஒரு குழுவினர், கம்பளை திம்புல் பத்தானையில் 47 வயதான பெண்ணிடம் 20ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு சூனியம் செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். மந்திரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் தப்பிச்சென்றதன் பின்னர், சுகயீனமடைந்த அந்தப்பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் அப்பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்போது அவருடைய அந்தரங்க உறுப்பிலிருந்து தேசிக்காய் இரண்டை அகற்றியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்