03 மாதங்களில் தட்டம்மை நோய் மும்மடங்காக அதிகரிப்பு…

(FASTNEWS|COLOMBO) இந்த வருடத்தில் முதல் 3 மாதங்களில் தட்டம்மை நோயானது, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவில் தட்டம்மை நோயானது 700 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யுக்ரைன், மடகஸ்கார் மற்றும் இந்தியாவில் தட்டம்மை நோய் அதிகம் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடகஸ்காரில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இதுவரை குறைந்தது 800 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தட்டம்மை நோய்த்தொற்று, நுரையீரல் மற்றும் மூளையைப் பாதிக்கும் தீவிர நோய் நிலைமையை உருவாக்கக்கூடியதாகும்.