(FASTNEWS|COLOMBO) – திருத்தப்பணி காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலைமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களனி, வத்தளை, பெஹலியாகொடை, கட்டுநாயக்க – சீதுவ மற்றும் ஜாஎல நகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.