ஹிக்கடுவ பகுதியில் வைத்து ஒரு மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபில் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக சிறைக் காவலர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்திருந்தனர்.
குறித்த சம்பவத்துக்கு சாட்சியாகவே நேற்று புதன்கிழமை (04) கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் இருந்துள்ளார்.
அந்த சாட்சியை இல்லாமல் செய்யவே அவர், இலஞ்சம் பெற்றுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.