(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று(20) கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமத்திய , மேல் மாகாணங்களில் இன்று 100 மில்லிமீட்டர் வரையான இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மன்னார், வவுனியா மாவட்டங்களில் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடி மின்னலுடன் கூடிய மழையின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.