முற்றுமுழுதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 10,000 தொன் எடையுடைய போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய அதிநவீன போர் கப்பலை சீனா கடற்படைக்காக உருவாக்கியுள்ளது.
குறித்த இந்த போர் கப்பலில் வான்வழி தாக்குதல்களை தடுத்து அழிக்கும் ஆயுதங்கள், வான்வெளியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், கப்பல்களில் இருந்தும் நீர்மூழ்கி கப்பல்கள் வழியாக வரும் தாக்குதல்களை எதிர்க்கவும் கூடிய அதிநவீன ரேடார்களும் அதிநவீன கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் ஷங்காய் நகரில் உள்ள ஜியாங்னான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் குறித்த இந்த இணைப்பு விழா நேற்று(29) நடைபெற்றது.