‘புர்கா’ தடை

‘புர்கா’ தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடை செய்யப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவின் நாடாளுமன்ற இன்றைய உரையில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் சுமார் 37 இலங்கையர்கள், சிரியா சென்று ஐ.எஸ் அமைப்புடன் இணைந்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கு உதவிய குற்றத்தில் 54 பேர் வெளிநாடுகளில் கைதாகி அவர்களில் 50 பேர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.