இலங்கை புர்கா தடை சர்வதேசத்தினை நோக்கி

இலங்கை புர்கா தடை சர்வதேசத்தினை நோக்கி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் முகத்தை முழுமையாக மூடும் புர்காவை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.

புர்காவை தடை செய்வதற்கும்,1000 மதராஸா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் அறிவித்தமையை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் முதன்மையான ஊடகங்களான பிபிசி, ரொய்டர், ஏபீசி போன்ற ஊடகங்கள் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்களாகியுள்ள நிலையில் புர்காவை தடை செய்வதற்கு இலங்கை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் சிறுபான்மையான முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அல் ஜெசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.