
கெகிராவயில் போலி தங்கம், மாணிக்கம் சிக்கியது.
கெகிராவ – கும்புக்செவன பிரதேசத்தில் போலி புதையல் பொருட்களை விற்பனை செய்ய முயன்ற இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி தங்கக்கட்டிகள் மற்றும் பேலி மாணிக்கம் உள்ளடக்கிய செம்பு என்பவை கைப்பற்றியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
37,38 வயதுடைய கெகிராவ பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை இன்று கெகிராவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
-கே.அஸீம் முஹம்மத் –
