நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்தம்..!

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்தம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 07 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (24) வைத்திய நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8:00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்;

“சுகாதார அமைச்சை சதிகாரர்களிடம் ஒப்படைத்ததே இந்த வேலை நிறுத்தத்திற்கு முக்கிய காரணம். எங்களிடம் 07 கோரிக்கைகள் உள்ளன. இந்த வேலைநிறுத்த செயல்முறை நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டாலும் மகப்பேறு மருத்துவமனைகள், குழந்தைகள் மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள், சிறுநீரக மருத்துவமனைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவை இந்த தொழில்முறை நடவடிக்கைக்கு பங்களிக்காது…”