அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன், இன்னுமொரு ஈஸ்டர் வகை குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம்..!

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன், இன்னுமொரு ஈஸ்டர் வகை குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம்..!

அடுத்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு வகை குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, 2019 ஆம் ஆண்டு தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் யாரேனும் தலைமறைவாக இருந்தால், விரைவில் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் 2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்னொரு குழப்பத்தை உருவாக்கலாம்.

“201 இல் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஒரு தீவிரவாதி என்பது உண்மைதான். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட குழுவினர் அவரையும் அவரது குழுவையும் தாக்குதல்களை விரைவுபடுத்தியதுதான் பிரச்சினை,” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 க்கு முன்னர் இலங்கையில் நடந்த பல்வேறு இஸ்லாமிய விரோத செயல்களுக்கும் நியூசிலாந்தில் பள்ளிவாசல் தாக்குதலுக்கும் பழிவாங்கும் வகையில் சஹ்ரான் மற்றும் குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.