நாட்டை கட்டியெழுப்ப சகல முஸ்லிம்களையும் ஒன்றிணையுமாறு மீளாத் வாழ்த்துச் செய்தியில் ஜானாதிபதி அழைப்பு..!

நாட்டை கட்டியெழுப்ப சகல முஸ்லிம்களையும் ஒன்றிணையுமாறு மீளாத் வாழ்த்துச் செய்தியில் ஜானாதிபதி அழைப்பு..!

இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மீலாத் வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது:

மனிதகுலத்திற்கு அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் தூதரான முஹம்மது நபி அவர்கள், அல்லாஹ்வின் கடைசி இறைத் தூதராவார்.

அன்றைய அராபிய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் முகங்கொடுத்த கடினமான அனுபவங்கள், கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட தருணத்திலும் பொறுமையும் மௌனமுமே அவரின் கூரிய ஆயுதங்களாக இருந்தன. நம்பிக்கை மற்றும் மனித நேயத்திற்காக முஹம்மது நபி செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக, அவரால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்தது.

பரஸ்பர புரிதல், சகோதரத்துவம், ஒருவருக்கொருவர் உதவி, , நேர்மையென வாழ்நாள் முழுவதும் அவர்,காத்து வந்த பண்புகளை , நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம், நமது வாழ்வின் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். மேலும், அவரது தத்துவத்தை மேலும் சமூகமயமாக்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் பணியாற்றுவது அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த மரியாதை என்று நான் நம்புகிறேன்.

நபிகள் நாயகம் காட்டிய விழுமியங்களுக்கு ஏற்ப, நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதையை வலுப்படுத்த அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இனிய மீலாதுன் நபி தின வாழ்த்துக்கள்!