இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் உறுதியான ஆதரவு’ – பெஞ்சமின் நேதன்யாகு உடன் பேசிய பிரதமர் மோடி..!

இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் உறுதியான ஆதரவு’ – பெஞ்சமின் நேதன்யாகு உடன் பேசிய பிரதமர் மோடி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  புதுடெல்லி: ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்த சமீபத்திய தகவல்களை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார்.

தங்கள் நாட்டுக்குள் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரின் 1,290 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ‘போரை நாங்கள் தொடங்கவில்லை. ஆனால், நாங்கள் வெற்றிகரமாக அதனை முடித்துவைப்போம். இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறக்கமுடியாத பதிலடியை நாங்கள் கொடுப்போம்’ என்று கூறி இருந்தார்.

இந்நிலையில்இ பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் குறித்த சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘தற்போதைய நிலை குறித்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு நன்றி. கடினமான இந்த தருணத்தில் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் தங்கள் உறுதியான ஆதரவை அளித்து வருகிறார்கள். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, போர் தொடங்கிய கடந்த சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் குறித்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காகவும்இ அவர்களின் குடும்பங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். இந்த கடினமான தருணத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது’ என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

பிரதமரின் பதிவுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் நன்றி. இந்திய சகோதர, சகோதரிகளிடம் இருந்து மிகப் பெரிய ஆதரவு இஸ்ரேலுக்குக் கிடைத்துள்ளது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளேன். எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பது நினைகூரத்தக்கது.