புலமைப்பரிசீல் பரீட்சை வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டோர் மீது சட்ட நடவடிக்கை..!

புலமைப்பரிசீல் பரீட்சை வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டோர் மீது சட்ட நடவடிக்கை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சையின் பின்னர் சமூக வலைத்தளங்களில் வௌியாகின.

குறித் செயலை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (15) நடைபெற்றது.

இதில் 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.