
பாகிஸ்தான் செமி பைனல் செல்ல வேண்டும் என்றால், முதலில் துடுப்பாடி விட்டு பின்னர் இங்கிலாந்து வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு ‘டைம் அவுட்’ முறையில் அனைவரையும் ஆட்டமிழக்க வைக்க வேண்டும் ; வாசிம் அக்ரம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா அணி பெற்றது.
இந்தியா ஏற்கனவே 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது அணி தென்னாப்பிரிக்கா அணியாகும்.
இப்போது, அரையிறுதிக்குள் நுழைய ஒரேயொரு அணிக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன.
இந்நிலையில் நேற்றைய இலங்கையின் தோல்வியுடன் நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் 0.743-ஐ எட்டியதோடு – பாகிஸ்தான் அணி 0.036 என்ற நிகர ரன் ரேட்டுடன் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் வெற்றியால் அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதாவது வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நியூசிலாந்து அணியைவிட நிகர ரன் ரேட் சிறப்பாக இருக்கும் வகையில் பெரிய வித்தியாசத்தில் இருக்க வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. எனவே, முதலில் பாகிஸ்தான் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. சாதாரண வெற்றி பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்ல அனுமதிக்காது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் விளையாடி 300 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் இந்த இலக்கை 6.1 ஓவர்களில் மட்டுமே அடைய வேண்டும். அதாவது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் 6 ரன்கள் எடுத்தாலும், அவர்களால் 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும்.
இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 100 ரன்களில் ஆல் அவுட் செய்தாலும், 2.5 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும்.
அதேசமயம், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தால்,இங்கிலாந்து அணியை வெறும் 13 ரன்களில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும்.
அதாவது, அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்.
‘இதுபோன்ற சூழ்நிலையில், 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், பாகிஸ்தான் 450 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இல்லையென்றால், நியூசிலாந்து அணி முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் விளையாடும்’ என இது தொடர்பில் ஹர்பஜன் சிங் தெரிவித்த போது,
‘பாகிஸ்தான் முதலில் பேட் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு டைம்டு அவுட் முறையில் அனைவரையும் ஆட்டமிழக்க வைக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நகைச்சுவையாகக் கூறியதாக பாகிஸ்தானின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.