இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.