
மீண்டும் தீப்பற்றிய கிரிஷ்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் இன்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த கட்டிடத்தின் 35 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.