
துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2017 முதல் 2019 வரை தேசிய லொத்தர் சபையின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லொலுவ, ஜூன் 2 ஆம் திகதி வரை கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.