T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கிடையில், எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகநத்த பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கோடாவுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 55 வயதுடைய எத்திமலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

 

இதேவேளை, போரா 12 வகை துப்பாக்கியுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கதெனிய பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.

சிலாபம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுத்த சோதனையில், குறித்த துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பங்கதெனிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

COMMENTS

Wordpress (0)