
குருனாகலை நகர சபை தலைவராக NPPயும் பிரதி தலைவராக ACMCயும் தெரிவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருனாகலை நகர சபை தலைவராக NPP உறுப்பினரும் பிரதி தலைவராக ACMC உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நகர சபை தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் 12 வாக்குகளை பெற்ற ஆனந்த எண்டன் நகர சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னிருத்திய வேட்பாளர் ஸுமித அருனஷாந்தவுக்கு 10 வாக்குகள் கிடைத்தன.
அதே நேரம் நகர சபை பிரதி தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் மொஹமட் அசார்தீன் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.