
மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மின் தூக்கியில் (Lift) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை (21) உயிரிழந்துள்ளார்.
அச்செழு வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் விருந்தினர் விடுதியின் மின் தூக்கியில் செல்லும்போது தலையை மின்தூக்கிக்கு வெளியே எடுத்ததால் தலை சுவருடன் மோதி குறித்த விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகிதிக்கப்படுகிறது.