நாடு பூராகவும் 8,355 தன்சல்கள்

நாடு பூராகவும் 8,355 தன்சல்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எசல பௌர்ணமியை முன்றிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, சுகாதாரப் பாதுகாப்பான முறையில் அந்த தானசாலைகளை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

மேலும், இன்று (10) முழுவதும் தானசாலைகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இதற்காக சுமார் 2,000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

COMMENTS

Wordpress (0)