
ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேற்படி வழக்கின் தீர்ப்பு இன்று (24) அறிவிக்கப்படவிருந்தது.
எனினும், செப்டம்பர் 23 ஆம் திகதி வரை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.