பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் வாகனத்தின் சாரதி கஞ்சா ோ​ை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்தது.

குறித்த விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், ஏனைய 5 பேர் ஆண்கள் என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.

ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் ஒன்று, பொரளை மயான சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

விபத்துக்கு காரணமான கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கிரேன் வாகனத்தில் பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

COMMENTS

Wordpress (0)