
ரணிலை உடனடியாக விடுவிக்கவும் – நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதுவர் அவசர வேண்டுகோள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டுமென நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
தடுப்பு காவலில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
மேலும் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தினார்.