செவ்வாய்க் கிரகத்தை இன்று(31) மிகத் தௌிவாக பார்வையிட முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திரங்கள் மற்றும் வானியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாட்களில் செவ்வாய்க்கிரகம் பூமியை அண்மித்து பயணிப்பதாகவும், செவ்வாய்க்கிரகம் பூமியை அண்மித்து பயணிப்பது 15 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறும் நிகழ்வென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.