15,500 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு

(FASTNEWS|COLOMBO) – கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 18 மில்லயன் ரூபாவுக்கும் அதிகமான பீடீ சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த காலப்பகுதியில் 15,500 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இவை வெளிநாடுகளில் இருந்து இரகசியமான முறையில் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் இலங்கை சுங்கத்திணைக்களத்துக்கான வருமானம் வீழ்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்