பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு…

எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாண் தவிர்த்து பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு, டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு ஆகிய காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.