18 லட்சம் பெறுமதியான சிகரட் தொகையுடன் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 18 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரட் தொகையுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

153 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ளவர் ராகம பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.