19 ஆவது திருத்தச் சட்டம் – கலந்துரையாடத் தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பில் கலந்துரையாடத் தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நிறைவேற்று அதிகாரத்திற்கும் அரசியல் யாப்புக்கும் இடையில் ஒரு சமநிலை தன்மை பேணப்படுவது சிறந்தது என குறித்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.