துணை மருத்துவ சேவையைச் சார்ந்த எட்டு தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று(17) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
நேற்று(16) காலை 8 மணி முதல் ஆரம்பமான இந்த போராட்டம் 48 மணி நேரத்துக்கு முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.
சுகாதாரத்துறையில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருந்த பல சத்திரசிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.