2 ஆம் கட்ட தபால்மூல வாக்குப்பதிவுகள் இன்று…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் இரண்டாம் கட்ட தபால்மூல வாக்குப்பதிவுகள் இன்று(25) ஆரம்பமாகவுள்ளன.

குறித்த வாக்குப்பதிவுகள் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற முதலாம் கட்ட தபால்மூல வாக்குப்பதிவில் தமது வாக்குகளைப் பதிவுசெய்த அரச அதிகாரிகள் தவிர்ந்த ஏனையவர்கள் இன்றும் நாளையும் வாக்குப்பதிவை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.