யோசித்த ராஜபக்ஷவுக்கு மே மாதம் 31ம் திகதியிலிருந்து 2 மாத காலம் அவுஸ்திரேலியா அல்லது ஜப்பான் ஆகிய நாடுகள் இரண்டிற்கும் பயணங்களை மேற்கொள்ள முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(23) உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வௌிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மோசடி குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.