திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவபட்டியை சேர்ந்தசல்மாவுக்கும் (19). கோபி குருமந்தூரை சேர்ந்த நிவாசுக்கும்(26) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோலராக நவாஸ் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாகவே சல்மாவிடம், கூடுதல் வரதட்சணை கேட்டு நிவாசும், அவரது தாயார் குர்ஷித் உன்னிசாவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். ஒரு கட்டத்தில், சல்மாவை ஆபாசப்படம் எடுக்க நிவாஸ் முயன்றுள்ளார். இதுபற்றி அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, நிவாசுக்கு 20க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதையும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவையும் சல்மா கண்டுபிடித்துள்ளார்.
பெண்களை ஊட்டி போன்ற பல இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்ததும், வீட்டிற்கே பல பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி நிவாசின் தாயார் குர்ஷித் உன்னிசாவிடம் கேட்டதற்கு, என் மகன் அப்படித்தான் இருப்பான் என்று கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து சல்மா அளித்த புகாரின்பேரில் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நிவாஸ் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்தனர். தில் கோபி, காங்கயம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த இளம்பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இருந்தது. அதில் ஒரு பள்ளி மாணவியின் படம் இடம் பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து நிவாசையும் அவரது தாயார் குர்ஷித் உன்னிசாவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்