புதிய தேர்தல் மாற்றத்தின் போது தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகள் நேற்று தீர்மானங்களை இறுதி செய்யவில்லை.
புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆகவோ அல்லது 255 ஆக தெரிவு செய்யவேண்டும் என இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இன்றைய கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் பட்சத்தில் விரைவில் 20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.