2000 மில்லியன் நட்டஈடு கோரிக்கையை வாபஸ் பெற்றார் சுஜீவ

தனக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் 2000 மில்லியன் நட்டஈடு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலுக்கு எதிராக தாக்கல் செய்த அவமான வழக்கை பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.

காப்பர் கொள்கலன் ஒன்றை விடுவிப்பது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காப்பர் கொள்கலனை விடுவிக்க அழுத்தம் கொடுத்ததாக பாராளுமன்றுக்கு வெளியில் தனது பெயரை கூறி தனக்கு அவமானம் ஏற்படுத்தியதாக சுஜீவ சேனசிங்க, முஸ்ஸமிலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

(riz)