2018ம் ஆண்டில் தேர்தலை நடத்­து­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் குறைவு..- மஹிந்த

பத­விக் காலம் முடி­வ­டைந்­ துள்ள மூன்று மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லை­யும் அடுத்த ஆண்­டில் நடத்­து­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் குறை­வா­கவே காணப்படுவதாக தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்­ளார்.

கிழக்கு, வட­மத்­திய, சப்­பி­ர­க­முவ மாகா­ண­ச­பை­க­ளில் பத­விக் காலங்­கள் முடி­வ­டைந்­துள்­ளன. குறித்த பத­விக் காலம் முடி­வ­டை­யும் மாகா­ண­ ச­பை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­த­ வேண்­டிய நிர்­பந்­தம் அர­சுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

20ஆவது திருத்­தச் சட்ட வரை­வின் ஊடாக அதனை ஒத்­திப்­போ­டு­வ­தற்கு முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த நிலையில், உயர்­நீ­தி­மன்­றத்­தின் விளக்­கத்­தை­ய­டுத்து 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வைக் கைவிட்ட அரசு, மாகா­ண­ச­பை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­துக்குக் கொண்டு வந்­து, சட்­ட­வ­ரைவை நிறை­வேற்­றி­யது.

இத­னூ­டாக மாகா­ண­ச­பை­க­ளுக்­கான எல்லை நிர்­ண­யம் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்.

மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­றும் என்று அரசு அறி­வித்­தி­ருந்­தது. இந்த விட­யம் தொடர்­பில் தேர்­தல்­கள் ஆணை­யா­ள­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது.

அதற்கு பதிலளிக்கையில் அவர்; “..அடுத்த ஆண்­டி­லும் தேர்­தல் நடப்­ப­தற்­கான சாத்­தி­யம் 50% இற்கும் குறை­வா­கவே உள்­ளது. புதிய மாகாண சபை திருத்­தச் சட்­டத்­தின் பிர­கா­ரம் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள எல்லை மீள் நிர்­ண­யக்­குழுத் தேர்­தல் தொகு­தி­களை வரை­ய­றுக்­கும் பணி­களை முடிக்­க­ வேண்­டும். அதன்­பின் முழு விட­ய­மும் மீளாய்வு செய்­யப்­பட்டு, குறை­கள் திருத்­தப்­பட வேண்­டும்.

இந்த நடை­மு­றை­ கள் அனைத்­தும் முடிந்து அடுத்த வரு­டம் மாகாண சபைத் தேர்­தலை நடத்­த­ மு­டி­யுமா என்­பது கேள்­விக்­­குறி­யா­கவே உள்­ளது..’ என தெரிவித்திருந்தார்.

 

(rizmira)