2018 கல்வியாண்டில் சாதாரண தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம்…

2018 கல்வியாண்டில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் பிரதி ஆணையாளர் எஸ்.பிரணவதாஸன் தெரிவிக்கையில், கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆரம்பமாகும் திகதியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.