உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைய நேற்று(11) வாய்ப்புக் கிட்டியது.
அதன்படி, எதிர்வரும் 15ம் திகதி இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா அணி மோத உள்ளது.
உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.