2019ம் வருட இறுதிக்குள் ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகம்

(FASTNEWS | COLOMBO) – 2019ம் வருட இறுதிக்குள் ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகப்படுத்தப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் திலங்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டமானது நான்கு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, இந்த முறைக்கு பயணிகள் பழக்கப்படும் வரையில் சாதாரண பயணச் சீட்டுக்களை விநியோகிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.